கொங்கணாபுரம் அருகே 100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 

கொங்கணாபுரம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 100 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

Update: 2024-03-06 09:24 GMT

சாராய ஊறல் அழிப்பு 

 சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே தங்காயூர் கிராமம் மாதேஸ்வரன் கோவில் எதிர்புறம் உள்ள ஓடை அருகில் சாராய ஊரல் போட்டுள்ளதாக கொங்கணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது  தகவலின் பெயரில் அங்கு விரைந்த கொங்கணாபுரம் காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் மூர்த்தி மற்றும் ராமசாமி தலைமையிலான போலீசார் அங்க போடப்பட்டிருந்த 100 லிட்டர் சாராய ஊழல்களை அழிக்கபட்டது. இது சம்பந்தமாக கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News