மலைப்பகுதியில் 4000லி சாராய ஊறல் அழிப்பு

அணைக்கட்டு அருகே மலைப்பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-24 02:03 GMT

சாராய ஊறல் அழிப்பு

அணைக்கட்டு, வேப்பங்குப்பம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட மலை பகுதிகளில் ஜார்தான்கொல்லை மலை கிராமத்திலும் பீஞ்சமந்தை, எட்டிப்பட்டி, அணைக்கட்டு, அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அடர்ந்த காட்டுக்கு நடுவே 2 இடங்களில் கானாற்று படுகையோரம் பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 100 லிட்டர் சாராயத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சாராய ஊறல் மற்றும் சாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்புகள், பிளாஸ்டிக் பேரல்கள், மண்பானைகளை சேதப்படுத்தி தீயிட்டு எரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News