மேட்டூர் அருகே கோவிலுக்கு ஒரு கிலோ தங்க கவசம் வழங்கிய பக்தர்

மேட்டூர் அருகே ஜலகண்டபுரத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு ஒரு கிலோ தங்க கவசம் காணிக்கையாக வழங்கிய பக்தர்.

Update: 2023-10-24 09:44 GMT

தங்க கவசம் வழங்கிய பக்தர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த ஜலகண்டபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பக்தர் சுகுமார் (75) நகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது தனது 75-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு ரு.75 லட்சம் மதிப்பில் ஒரு கிலோ தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். மேலும் ஸ்ரீ வள்ளி தெய்வனானை கல்யாண சுப்பிரமணியர் சாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக ஜலகண்டாபுரம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக மேல தாலத்துடன் கலயாண சுப்பிரமணியர் கோவிலுக்கு தங்க கவசம் எடுத்து வரப்பட்டது. இந்த விழாவில் ஊர் பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News