தருமபுரி கல்லூரி மாணவி மாயம்: காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம் , தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 10:53 GMT
காவல் நிலையம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள கோல்டன் தெருவை சேர்ந்தவர் சத்யா இவருக்கு வயது 19 தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பயோ டெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை காணவில்லை.
இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி சத்யா கிடைக்காத நிலையில் சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் படி, தர்மபுரி பி1 நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.