மே தின வாழ்த்து தெரிவித்த தர்மபுரி எம்எல்ஏ

தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி. வெங்கடேஸ்வரன் அனைத்து பொதுமக்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-05-01 02:08 GMT

வெங்கடேஸ்வரன் 

தர்மபுரி எம்எல்ஏ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்ட மக்களுக்கும் மற்றும் உலகில் உள்ள அனைத்து பாடுபடும் பாட்டாளி மக்களுக்கும் எனது மனமார்ந்த சர்வதேச உழைப்பாளர் தினமான மே தின வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்வது உங்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் நான் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.தருமபுரி மாவட்டம் மிகவும் பிற்பட்ட மாவட்டம், இம்மாவட்ட தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கடுமையாக உழைத்து அங்கே முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மிகவும் பிற்பட்ட மாவட்டமான நமது தருமபுரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நம் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே நமது எண்ணம். உழைப்பால் ஒவ்வொரு கிராமமும் முன்னேறினால்தான் மாவட்டம் முன்னேறும், மாவட்டங்கள் முன்னேறினால் மாநிலம் முன்னேறும், மாநிலங்கள் முன்னேறினால் நாடே முன்னேறும். ஆகவே ஒன்றுபடுவோம், உழைப்போம், உயர்வோம் கடுமையான உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News