கடலூர் அருகே விபத்தில் சம்பவ இடத்தில் மரணம் 

கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் ரங்கநாதன் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு.

Update: 2024-01-18 07:05 GMT

சாலை விபத்தில் உயிர் இழந்த சம்பவம்

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்த ரங்கநாதன் டி.வி.எஸ் மொபட்டில் சிலம்பிநாதன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.ஆராய்ச்சிக்குப்பம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News