தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திண்டுக்கல் லியோனி பங்கேற்ப்பு

பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திண்டுக்கல் லியோனி பங்கேற்றார்.

Update: 2024-05-10 09:59 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திண்டுக்கல் லியோனி பங்கேற்ப்பு

கோடைகால வெப்பத்தைத் தணிக்கும் வகையில், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 10 இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கப்பட்டது. பல்லாவரம் தா்கா சாலையோரமாக தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனி ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னா், பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி, இளநீா், நுங்கு,வெள்ளரிக்காய், குளிா்பானங்கள், குடிநீா் மற்றும் பழ வகைகளை வழங்கினா். இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று பழங்களை வாங்கிச் சென்றனா்.

Tags:    

Similar News