மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சுற்றுலா: துவக்கி வைத்த ஆட்சியர்

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சுற்றுலா செல்லும் வாகனத்தை கொடியசைத்து ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-11 16:27 GMT

சுற்றுலா வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் செவித்திறன் குறைபாடு உள்ள மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையம் குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா 2023-2024 திட்டத்தின் கீழ் மேட்டூர் அணை பூங்கா மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோயில்,

ஆகிய இடங்களுக்கு சுமார் 50 குழந்தைகள் செல்லும் சுற்றுலா வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இக்குழந்தைகளுடன் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றுலா செல்லும் குழந்தைகளுக்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார்.

Tags:    

Similar News