வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணி!

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்து பணி ஆணையினை வழங்கினார்.

Update: 2024-04-18 11:25 GMT
 திருவண்ணாமலை

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணியாளர்களை அனுப்பும் பணியினை திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார் ‌. இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News