நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிருஷ்ணகிரியில் இருந்து 9 மற்றும் 10 கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2023-12-19 08:01 GMT

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிருஷ்ணகிரியில் இருந்து 9 மற்றும் 10 கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 வது கட்டமாக ரூ. 5 இலட்சத்து 56 ஆயிரத்து 850 மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் மற்றும் 10 வது கட்டமாக ரூ. 7 இலட்சத்து 22 ஆயிரத்து 400 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ 12 இலட்சத்து 79 ஆயிரத்து 250 மதிப்பிலான நிவாரணப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வாகனம் மூலம் சென்னைக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(பொது) புஷ்பா, பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் மிருளாளினி ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News