சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-20 17:35 GMT
சேலம் மாநகராட்சியின் சார்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் சேலம் மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் இருந்து வாகனங்கள் மூலம் பொருட்கள் அனுப்பும் நடந்து வருகிறது. இந்த பணிகளை மேயர் ராமசந்திரன், கமிஷனர் பாலச்சந்தர், துணை கமிஷனர் அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பொருட்களை அனுப்பி வைத்தனர்.