கார் வாங்கியதில் தகராறு : இருவர் மீது வழக்கு

முசிறியில் கார் வாங்கியதில் தகராறு செய்து தாக்கி கொண்ட இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-21 11:23 GMT

கார் வாங்கியதில் தகராறு : இருவர் மீது வழக்கு

முசிறி பெரியார் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சதீஷ்குமார் (39), இவருக்கு முசிறி அருகே உள்ள ராக்கம் பட்டி சேர்ந்த கருப்பசாமி மகன் மதியழகன் (40), என்பவர் கமிஷன் அடிப்படையில் ஒரு கார் வாங்கி கொடுத்துள்ளதாகவும், இதற்கு மதியழகனிடம் கமிஷன் தருமாறு சதீஷ்குமார் கேட்டபோது இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு சுரேஷ்குமார் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News