திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கல்
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-29 10:35 GMT
படிவங்கள் வழங்கிய ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து உயர்கல்வி பயில விரும்பும் (தனியார் கல்லூரி உட்பட) மாணவ, மாணவியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை முகாமில் கல்லூரி சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் செளம்யா ஆனந்த், உயர்கல்வித் உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பக்தவச்சலம் ஆகியோர் உள்ளனர்.