சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்று வழங்கல்
திருத்துறைப்பூண்டி சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Update: 2024-06-01 10:18 GMT
திருத்துறைப்பூண்டி சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி எம்எல்ஏ மாரிமுத்து தொடங்கி வைத்தார். வரும் ஐந்தாம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.