பள்ளி மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2024-06-10 05:49 GMT

பாடநூல்கள் வழங்கல் 

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட டபீர் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். உடன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் , முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்கள் காந்திராஜா, கீதா செந்தில் முருகன் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மேகநாதன் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துக்கனியன் உள்ளனர்.
Tags:    

Similar News