வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தார்.

Update: 2024-04-18 10:45 GMT

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 23-கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 179-விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (18.04.2024) பார்வையிட்டார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சூரியபிரபு, இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News