கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்பு

கோட்டூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பாகேற்றார்.

Update: 2023-11-01 08:38 GMT

கிராமசபை கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கோட்டூரில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்றார் .இக்கூட்டத்தில் பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு உரிய நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டும். பண்டிகை காலம் என்பதால் குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருக்கும் உள்ளாட்சி தின நல்வாழ்த்துக்கள், தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் வடிவேல்,உதவி இயக்குனர் சௌந்தர்யா ,மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News