எடப்பாடியில் மாவட்ட அளவில் ஜூனியர் ஒற்றையர் இறகு பந்து போட்டி

எடப்பாடியில் நடைபெற்ற ஜூனியர் ஒற்றையர் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-29 10:04 GMT
எடப்பாடியில் நடைபெற்ற இறகு பந்து போட்டி

எடப்பாடி GS உள் விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைப்பெற்ற மாவட்ட அளவில் ஜூனியர்களுக்கான ஒற்றையர் இறகு பந்து போட்டி நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 11 வயது பிரிவில் முதல் பரிசு ஆதித்யா GS.எடப்பாடி, இரண்டாம் பரிசு தர்ஷா GT93 மேட்டூர், மூன்றாம் பரிசு ஜஸ்வந்த் GT93மேட்டூர், 13 வயது பிரிவில் முதல் பரிசு GS. எடப்பாடி, இரண்டாம் பரிசு கௌதம் செட்டியபட்டி,

மூன்றாம் பரிசு விஷ்ணு GT93 மேட்டூர், 15 வயது பிரிவில் முதல் பரிசு இம்மானுவேல் GT93 மேட்டூர், இரண்டாம் பரிசு சரவணன் GT93 மேட்டூர், மூன்றாம் பரிசு ஹரிகாந்த் சின்னப்பம்பட்டி, 17 வயது பிரிவில் முதல் பரிசு ஜீவன் பிரியன் GT93 மேட்டூர், இரண்டாம் பரிசு சதீஷ் செட்டியபட்டி, மூன்றாம் பரிசு சஜீத் GS. எடப்பாடி அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியில் எடப்பாடி, மேட்டூர்,சின்னப்பம்பட்டி, செட்டியபட்டி, மகுடஞ்சாவடி, ஆகிய ஊர்களில் இருந்து மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின இதில் அதிக வெற்றி இடங்களை GT93 மேட்டூர் அணியினர் பெற்று சென்றனர். வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கு ரேணுகா சில்க்ஸ் பூலாம்பட்டி மெயின் ரோடு கோணபைப் எடப்பாடி, சுப்பு என்பவர் வழங்கி வீரர்களை கௌரவித்தார்.

Tags:    

Similar News