மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி!

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 50 கிலோ எடைப்பிரிவு முதல் 70 வரை பங்கேற்ற 25 வயதுடைய இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-22 07:30 GMT

ஆணழகன் போட்டி

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 50 கிலோ எடைப்பிரிவு முதல் 70 வரை பங்கேற்ற 25 வயதுடைய இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது.

இந்த ஆணழகன் போட்டியை 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதட்டி விசில் அடித்து ஆறாவாரத்துடன் கண்டு ரசித்தனர் புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் பள்ளி நிறுவனர் ஜெயபாரதம் செல்லையா நினைவாக புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியை மாவட்ட வலு தூக்கும் சங்கத் தலைவர் கார்த்திக் மெஸ் மூர்த்தி கலந்துகொண்டு துவக்கி வைத்தார் இந்த ஆணழகன் போட்டியில் 50,55,60,65,70, ஆகிய உடல் எடைகளில் அடிப்படையில் பிரிக்கப்பட்டு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 130 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் 11 பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் கட்டழகு மேனியை கொண்டு பல்வேறு பொசிஷண்களை செய்து காட்டி நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தனர்.

மேலும் எடையின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 1)முதலிடம் கவிராகுல் ஆதனக்கோட்டை பத்தாயிரம் ரூபாய் 2)இரண்டாம் இடம் மாதவன் இலுப்பூர் ஐந்தாயிரம் ரூபாய் வீரர்களுக்கு பதக்கமும் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியை 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி விசில் அடித்து கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News