தீபாவளி :ஆராஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள்

Update: 2023-11-08 06:09 GMT
 தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆராஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கனவு இந்தியா அமைப்பின் சார்பில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் 210 மாணவ, மாணவிகளுக்கு ரூ2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை அமுதா தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை திலகம் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியை லூர்துமேரி வரவேற்றார். இதில் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு, ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுமாணவ, மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை வழங்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் கனவு இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான வக்கீல்கள் சதீஷ், கபிலன், சீனிவாசன், பூபாலன், தேவா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை லாவண்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News