மறைந்த விஜயகாந்திற்கு மோட்ச தீபம் ஏற்றிய தேமுதிகவினர்
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் மறைந்த விஜயகாந்திற்கு மோட்ச தீபம் தேமுதிகவினர் ஏற்றினர்.
Update: 2024-01-26 13:24 GMT
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. 30வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர் ஆனந் தலைமையில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் கேப்டன் விஜயகாந்த்திற்கு மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.