ராசிபுரம் அருகே துணி நெய்து வாக்குகள் சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர்

ராசிபுரம் அருகே கைத்தறியில் துணி நெய்து திமுக., கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-06 12:59 GMT

வாக்கு சேகரித்த கூட்டணி வேட்பாளர் 

ராசிபுரம் அருகே கைத்தறியில் துணி நெய்து வாக்குகள் சேகரித்த திமுக., கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன்.. பிரச்சாரத்தின் போது, துப்புரவு பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குகளை சேகரித்தார்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக., கூட்டணி கட்சியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணந்தூர் பகுதியில் கோழிப் பண்ணைகளில் முட்டைகள் சேகரித்து தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பாய்ச்சல் பகுதியில், திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் கைத்தறியில் துணி நெய்து கூலித் தொழிலாளர்களிடம் வாக்குகளை சேகரித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், உள்ளிட்ட கூட்டணி கட்சினர் பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாய்ச்சல் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்ட வேட்பாளர் மாதேஸ்வரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபாட்டார். அப்போது துப்புரவு பணியாளர் ஒருவரின் காலில் விழுந்து வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குகளை சேகரித்தார்.

Tags:    

Similar News