தி.மு.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை முன்னிட்டு குமாரபாளையத்தில் தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2024-06-05 11:24 GMT

 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை முன்னிட்டு குமாரபாளையத்தில் தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடினர்.  

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றமைக்காகவும், குமாரபாளையம் தொகுதி உள்ளடங்கிய ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் நகராட்சி தலைவரும், வடக்கு நகர பொறுப்பாளருமான விஜய்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்த இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News