120 நபர்களுக்கு சான்றிதழ்களை பெற்று கொடுத்த திமுகவினர்

நெல்லையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்த 120 மக்களுக்கு திமுக சார்பில் மீண்டும் சான்றிதழ்கள் வழங்கபட்டன

Update: 2024-01-01 02:49 GMT

120 நபர்களுக்கு சான்றிதழ்களை பெற்று கொடுத்த திமுகவினர்

நெல்லையில் கடந்த 17,18ஆம் தேதி பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தது மட்டுமின்றி தங்களது சான்றிதழ்களையும் பறிகொடுத்தனர். இந்த சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக நெல்லை மாநகர திமுக சார்பில் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பட்டில் சிறப்பு முகாம் கடந்த 29,30,31 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.இந்த முகாம் மூலம் 120 நபர்களுக்கு சான்றிதழ் கிடைக்க பெற்றுள்ளதாக மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News