பால் பதப்படுத்தும் ஆலையால் 12,500 விவசாயிகள் பயன் பெறுவார்கள் - ராஜேஷ்குமார் எம்பி!

Update: 2024-03-27 06:13 GMT

கே.ஆர்.என் ராஜேஷ்குமார் 

நாமக்கலில் அமையும் நவீன பால் பதப்படுத்தும் ஆலையால் 12,500 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த மோகனூரில் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் நவலடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பால் பதப்படுத்தும் ஆலை மூலம் 12,500 விவசாயிகள் பயன் பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி சார்பாக போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து ஓட்டு போடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News