25 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்பி

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணம் செய்து வைத்தார்.;

Update: 2023-11-02 10:15 GMT

திருமணம் செய்த எம்.பி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணம் செய்து வைத்தார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனை தொடர்பு அவர் பேசுகையில், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக திட்டங்கள் கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. "ஜெய்பீம் ' சினிமா பார்த்துவிட்டு அந்த படத்தில் வரும் காட்சிகளில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார். நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று குறைகளை தீர்த்து வைக்கிறார்.

வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்‌. நரிக்குறவர்கள் மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், வரும் காலங்களில் நரிக்குறவ மக்கள் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. ஆ.இராசா. பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் . பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால்,

வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், ஜெகதீஷ்வரன், அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம், துணை பெருந்தலைவர் ரெங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அப்துல்கரீம், சுப்ரமணியன்,பிரபாகரன், அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் இராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ரகமத்துல்லா, நல்லுசாமி, சித்தார்த், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ரினோபாஸ்டின், கிருஷ்ணா, ராகவி ரவிக்குமார், தமிழ்வேந்தன், இளையராஜா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கோபி கிருஷ்ணா, நரிக்குறவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மலையப்ப நகர் சிவக்குமார், எறையூர் பகுதி நரிக்குறவர்கள் நம்பியார், பாபு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியாக பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News