தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-01-26 01:42 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு மற்றும் தெற்கு நகர பொறுப்பாளர்கள் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஞானசேகரன் தலைமை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக மாவட்ட செயலர் மதுரா செந்தில், மாவட்ட பொருளர் ராஜாராம், தலைமைக்கழக பேச்சாளர்கள் பொள்ளாச்சி சித்திக், எழும்பூர் தேவநிதி ஆகியோர் பங்கேற்று, தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து விரிவாக பேசினர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும், பொதுமக்கள் தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ்,  நகராட்சி கவுன்சிலர்கள், நகர, வார்டு நிர்வாகிகள், மகளிரணியினர் என பெருமளவில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News