திமுக பாராளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் நாளை கால்கோள் விழா!

நாமக்கல் - சேலம் சாலை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் கால்கோள் விழா நாளை(20.03.2024)புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

Update: 2024-03-19 12:34 GMT

நாமக்கல் - சேலம் சாலை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் கால்கோள் விழா நாளை(20.03.2024)புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

வருகிற 2024 நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகம், நாமக்கல் - சேலம் சாலை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் கால்கோள் விழா நாளை(20.03.2024)புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கொங்குநாடு தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் MLA, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர், AKP சின்ராஜ் MP , தி.மு.க.நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான KRN ராஜேஷ்குமார் MP கலந்துக்கொள்கிறார்கள் , அதுசமயம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டத்தை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர்,மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் V.S.மாதேஸ்வரன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். முன்னதாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் AKPசின்ராஜ் , நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் VS மாதேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர் அருகில் மாவட்ட பொருளாளர் RSR மணி, நகராட்சி கவுன்சிலர் KRT மோகன், நாமக்கல் தெற்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார், கொல்லிமலை ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.
Tags:    

Similar News