சேலம் அருகே வாகனம் மோதி டாக்டர் பலி !

சேலம் அருகே வாகனம் மோதிய விபத்தில் டாக்டர் பலி. போலீசார் வழக்குப்பதிவு.

Update: 2024-03-01 10:36 GMT

டாக்டர் பலி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சந்தோஷ் (வயது 27), இவர், ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு ஆட்டையாம்பட்டியில் இருந்து பெத்தநாயக்கன் பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உத்தமசோழபுரம் பகுதியில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயம் அடைந்தார். அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது. அந்த வழியாக சென்றவர்கள் சந்தோஷை மீட்டு ஆம்புலன்சு மூலம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் டாக்டர் சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News