ஆழ்துளை கிணறு கை பம்ப் பயன்பாட்டிற்கு வருமா?

ஆழ்துளை கிணறு கை பம்ப் பயன்பாட்டிற்கு வருமா? என எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-04-27 16:54 GMT

கை பம்ப்

திருமழிசை அடுத்துள்ள நசரத்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகே ஆழ்துளை கிணறு கை பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இதை, இப்பகுதி வாசிகள் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடில்லாததால், பகுதிவாசிகள் தண்ணீருக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கை பம்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News