கிணற்றில் தவறி விழுந்த நாய்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை துரிதமாக கெங்கவள்ளி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Update: 2024-03-03 11:03 GMT

உயிருக்கு போராடிய நாய்

சேலம் மாவட்டம், வீரகனூர் தென்கரையில் விவசாயி ஒருவரின் விவசாய கிணற்றில் தெரு நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் கெங்கவள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நாய் தானே என்று துச்சமாக கருதாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டு கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

நாயை பத்திரமாக மீட்டு கொடுத்த கெங்கவள்ளி தீயணைப்புத் துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News