பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் அன்னதானம்

மதுராந்தகத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-05-01 11:44 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டார இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில், இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுராந்தகம் நகரில் மூன்று இடங்களில் 2000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமூர், செய்யூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் கலந்துகொண்டு மூன்று இடங்களில் பொது மக்களுக்கு அன்னதானத்தை வழங்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொண்டனர்.
Tags:    

Similar News