போகியன்று பழைய பொருட்களை எரிக்காதீங்க...!

போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-01-10 15:01 GMT

போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொள்கிறார்.
Tags:    

Similar News