கடன் சுமையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை !
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பேட்டையில் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த டிரைவர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 06:42 GMT
தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் 39 வயதான பூமிபாலன். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடன் சுமை அதிகரித்ததாக கூற ப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.