அரைகுறை ஆடையுடன் போதை ஆசாமி அட்டகாசம் -பெண் பயணிகள் பாதிப்பு

இராசிபுரம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் அரைகுறை ஆடையுடன் போதை ஆசாமி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பெண் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2024-06-13 03:02 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் அரைகுறை ஆடையுடன் போதை ஆசாமி ரகளை.போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையில் அமர்ந்து அட்டகாசம். இங்கு அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் புதுப்பட்டி,வடுகம் நாமகிரிப்பேட்டை பகுதியில் செல்வதற்கு பயணிகள் நிற்பது வழக்கம்.

இந்நிலையில் போதை ஆசாமி அரைகுறை ஆடையுடன் பெண்களின் முன்னால் படுத்து உருண்டதைக் கண்ட பெண் பயணிகள் செய்வது அறியாத திகைத்தனர் . சிறிது நேரத்தில் எழுந்து நின்ற போதை ஆசாமி வேட்டியை அழித்துவிட்டு ஜட்டியுடன் நின்றதை கண்ட பெண் பயணிகள் அங்கிருந்து நகர்ந்தனர். இதேபோல் அங்கு அமைந்துள்ள போக்குவரத்துக் காவலர் குடையில் ஏரி அமர்ந்து கொண்டு தொடர்ந்து ரகலையில் ஈடுபட்ட போதை ஆசாமியை என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்றனர் . இந்தப் பகுதியில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளில் மது குடிக்கும் மது பிரியர்கள் தினந்தோறும் இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News