மது போதையில் ரகளை - மின் ஊழியா் சஸ்பெண்ட்!

நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Update: 2024-05-12 08:24 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக அந்தோணி ராஜன் (45) பணிபுரிந்து வருகிறாா். இவா் மது அருந்திய நிலையில், அங்குள்ள அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் இதை வீடியோ எடுத்துள்ளனா். இந்த விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சாய் ஹரிஹரகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
Tags:    

Similar News