குற்ற பின்னணி உள்ள 164 பேர் வீடுகளில் டிஎஸ்பி இமயவரம்பன் அதிரடி ஆய்வு

Update: 2023-11-06 01:26 GMT

டிஎஸ்பி ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம் ஊரகம் பள்ளிபாளையம் குமாரபாளையம் காவல் காவல் நிலையங்களில் ரவுடிகள் லிஸ்டில் உள்ள 164 பேர் வீடுகளில் டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன், ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பாரதி மோகன், காவல் நிலைய ஆய்வாளர் தீபா,சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் காவலர்கள் மகளிர் காவலர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் நேற்று ஒரே நாளில் அதிரடி ரைடு நடத்தினர். பல வீடுகளில் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததும் சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திரும்பி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்கள் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதையும் ஒழுங்காக திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் கூறப்பட்டது இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், ரௌடி லிஸ்டில் இடம்பெற்றுள்ளவர்கள் எனவும் இவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் செல்வதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் ஒரே நாளில் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.இதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அருகில் இருந்த குற்றப்பின்னணி உள்ளவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களை அந்தந்த காவல் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News