முன் பகை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை கொலையாளி தப்பி ஓட்டம் !!

முன் பகை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை கொலையாளி தப்பி ஓட்டம். தளவாய்புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை

Update: 2024-06-01 06:30 GMT
 கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன் பகை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை கொலையாளி தப்பி ஓட்டம் தளவாய்புரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நீராவி அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் நீராவி ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டு வந்த நிலையில் நீராவி என்பவர் பகலில் கொத்தனார் உதவியாளராக வேலை செய்பவர் இரவில் ஜெகதீசன் என்பவர் வீட்டில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரவு காவலாளியாக இருந்த வீட்டிற்க்கு வந்த அய்யனார் நீராவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்து இருந்த அறிவாளால் தலை மற்றும் பல்வேறு பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டார் நீராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News