துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-06-10 02:00 GMT

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. துரியோதனனை பீமன் வதம் செய்து அவனின் உதிரத்தை எடுத்து பாஞ்சாலியின் கூந்தலில் தடவி ,பாஞ்சாலியின் சபதத்தை பீமன் நிறைவேற்றும் மகாபாரத காவிய நிகழ்ச்சி நாடகக் கலைஞர்களால் இன்று அரங்கேற்றப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News