நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மின்ஆளுமை கருத்தரங்கம்!

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மின்ஆளுமை கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது.

Update: 2024-07-08 09:36 GMT

கருத்தரங்கம்

சென்னை சி.ஏ.ஜி. அமைப்பு, சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மின் ஆளுமை குறித்த கருத்தரங்கம் சேலத்தில் நேற்று நடந்தது. சென்னை சி.ஏ.ஜி. அமைப்பின் ஆராய்ச்சியாளர் பரத், நுகர்வோர் உரிமைகள் இயக்க நிறுவனர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.ஏ.ஜி.ஆராய்ச்சியாளர் பரத் விளக்கவுரை ஆற்றினார். பெரியார் பல்கலைக்கழக ஊடகவியல் துறை தலைவர் நந்தகுமார், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள் செந்தில்ராஜா, ஜெயராமன், தங்கதுரை, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. மின் தொடர்பான கேள்விகளுக்கும், ஆலோசனைகளுக்கும் மின்வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News