பரந்துார் விமான நிலையத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராமமக்கள் உண்ணாவிரதம் 

ஏகனாபுரம் கிராமத்தினர் பரந்துார் விமான நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-28 09:22 GMT

ஏகனாபுரம் கிராமத்தினர் பரந்துார் விமான நிலையத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டம்,பரந்துாரில், புதிய விமான நிலையத்திற்கு, நிலம் எடுக்கும் பணியை, தமிழக தொழில் துறை பிப்., 24ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேல்பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 பேரிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட உள்ளன.

இவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மீதான விசாரணை ஏப்., 4ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம போராட்டக் குழுவினர், நேற்று முன்தினம் ஆலோசனை செய்தனர். பரந்துார் விமான நிலைய நில எடுப்பு அலுவலகத்தை, நேற்று முற்றுகையிடுவதற்கு ஏகனாபுரம் கிராமத்தினர், 94 பேர் புறப்பட்டு செல்ல முயன்றனர்.

இவர்களை, கைது செய்து சுங்குவார்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, ஏகனாபுரம் கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்."

Tags:    

Similar News