விஷம் குடித்து முதியவர் தற்கொலை!
வந்தவாசி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 12:45 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சந்திரன் பெற்றோர் ஆதிராஜ் ,தேவகுமாரி ஆகியோருடன் சென்னையில் வசித்து வந்தார் . இந்நிலையில் தேவகுமாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் மகள் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி தனியாக விட்டு சென்றதால் மன விரக்தி அடைந்த ஆதிராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி ஆதிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இது குறித்து தெள்ளார் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.