பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 கோடியே 83 லட்சம் பறிமுதல்

பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.2 கோடியே 83 லட்சம் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-12 15:43 GMT

பணம் ஒப்படைப்பு


பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வெள்ளிக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வந்த ஒரு காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியை 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத் தொகை கரூரில் உள்ள ஒரு வங்கியில் இருந்து திருச்செங்கோடு ஐந்து மலை மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்  மிஷினில் வைப்பதற்காக எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பரமத்திவேலுார் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News