வேளாங்கண்ணி அருகே தேர்தல் பறக்கும்படை சோதனை ரூ.59 ஆயிரம் பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே தேர்தல் பறக்கும்படை சோதனை ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-28 02:20 GMT
பறிமுதல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி- வேதாரண்யம் சாலையில் திருப்பூண்டி காரைநகர் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி காளிதாஸ் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அந்தப் பையில் ரூ. 59 ஆயிரத்து 60 ரூபாய் பணம் இருந்தது . பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தலைஞாயிறு சிந்தாமணி தெருவை சேர்ந்த பிரவின் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த 59 ஆயிரத்து 60 ரூபாய் பணத்தை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் கவிதாஸ்சிடம் ஒப்படைத்தனர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.