தென்காசியில் அரசு மருத்துவமனையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

தென்காசியில் அரசு மருத்துவமனையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-13 01:32 GMT
தென்காசியில் அரசு மருத்துவமனையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
தென்காசி மாவட்டம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமை தாங்கினார், கண்காணிப்பாளர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார், மூத்த மருத்துவர்கள் கீதா, ராஜேஷ், சுவர்ணலதா, விஜயகுமார், நிர்மல், அன்னபேதி, செவிலியர் கண்காணிப்பாளர் வள்ளி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News