அரசுப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சங்ககிரி அருகே பொன்னம்பளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-12 16:17 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குளட்பட்ட பொன்னாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் தை பொங்கல் ஜனவரி 15ம் தேதி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி பள்ளி வளாகத்தில் சங்ககிரி வட்டார கல்வி அலுவலர் கோகிலா முன்னிலையில் மத்திய, மாநில தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித்தலைமையாசிரியர் பொன்.தனராஜ் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைய அணிந்து புதிய மண்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கயிறு இழுத்தல், கோல போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News