கள்ளச்சாராய ஊறல் அழிப்பு : ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் கள்ளசாராய ஊறலை அழித்தனர்.

Update: 2024-06-23 09:57 GMT

கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளத்தனமாக சாராய விற்பனை, மது விற்பனை நடக்கிறதா என்று காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை தொடர்பாக புகார் இருந்தால் 8531085350 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நேற்று உடையாளிப்பட்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஆதனக்கோட்டையை சேர்ந்த வீராசாமி என்பவரை மறித்து விசாரணை செய்தபோது, அவருடைய பைக்கில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண் டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீராச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சாராய ஊறல் போட்டிருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஊறல் குடங்களை கைப்பற்றி அழித்தனர்.

Tags:    

Similar News