தூத்துக்குடியில் நிவாரண உதவிகள் வழங்கிய எர்ணாவூர் நாராயணன்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

Update: 2024-01-14 11:52 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாராயணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான மழை வெள்ள சேதாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம மக்களுக்கு வாழவள்ளானில் வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் நிவாரண உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், துணைச் செயலாளர் அருள்செல்வன்,

மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் அந்தோணி ஜெபராஜ், ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி பாலாஜி, ஆழ்வை அந்தோணிராஜ், கருங்குளம் அமல்ராஜ் ஏரல் நகரச் செயலாளர் லோகநாதன், ஒன்றிய நிர்வாகிகள் மகேஸ், நந்தகுமார் பாலா, மதன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News