விருதுநகர் : முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர் கூட்டம்

வருகின்ற 28ம் தேதி நடைபெற உள்ள முன்னாள் படைவீரர்களின் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்

Update: 2023-12-25 03:10 GMT

 முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் வரும் 28ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது .

எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சாந்தோர்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருவை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடைறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News