தச்சநல்லூரில் விலை உயர்ந்த நாய் திருட்டு

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ பகுதியில் விலை உயர்ந்த நாய் திருடப்பட்டுள்ளது.

Update: 2024-02-03 01:07 GMT

பைல் படம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் தனது வீட்டில் விலை உயர்ந்த நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்த நாயை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை.இதுகுறித்து அவர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News